பெய்ஜிங் : சீனாவின் அடனோவைரஸ் கோவிட்-19 தடுப்பூசி, பாதுகாப்பானது என்பதோடு, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக் கூடியது என மனிதர்கள் மீதான முதல் கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.இந்நிலையில், சீனாவின் அடனோவைரஸ் கோவிட்-19 தடுப்பூசி, பாதுகாப்பானது என்பதோடு, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக் கூடியது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.