திருவானந்தபுரம் : கேரளாவில் கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுகின்றன.இது குறித்த ஆய்வை விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒத்துக்குங்கல் நகரைச் சேர்ந்த ஏ.கே.ஷிஹாபுதீனின் சிறிய கோழி பண்ணையில் ஆறு கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளிட்டு வருகின்றன. சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, ஷிஹாபுதீன் தனது கோழிப்பண்ணையில் ஓரு கோழி போட்ட முட்டையில் பச்சை மஞ்சள் கரு இருப்பதைக் கண்டறிந்தார். அது பாதுகாப்பானதா என சந்தேகம் எழுந்ததால் அவரோ அவரது குடும்பத்தினரோ அதை உட்கொண்டதில்லை.