கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 134 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையின் நீர் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், கிருஷ்ணகிரி நகருக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அணை வறண்டதால், 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால், நகர மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில் பெய்த மழையால் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியது. இதனால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தையடுத்து, அந்த அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.