உதகை: உதகை அரசு தவிரவியல் பூங்காவில் கண்களுக்கு விருந்தளிக்கும் டெல்பீனியம் மலர்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளன. உதகை அரசு தவிரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது. இதில் யூரேஷியாவை சேர்ந்த டெல்பீனியம் என்னும் மலர்கள் தற்போது பூக்க தொடங்கியுள்ளது. சுமார் 5 அடி உயரம் கொண்ட இந்த செடியில் 15 வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகிறது.