டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்தது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,654 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 137 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 3,720 பேர் உயிரிழந்த நிலையில், 51,784 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,517 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 14,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7128 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 13,268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 802 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5880 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 259 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 54 பேர் குணமடைந்தது.
பீகாரில் 2177 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 629 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 218 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 178 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 172 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 62 பேர் குணமடைந்தது.
கோவாவில் 54 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 16 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 12,319 பேருக்கு பாதிப்பு; 208 பேர் பலி; 5897 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 1067 பேருக்கு பாதிப்பு; 16 பேர் பலி; 706 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 175 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 152 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 732 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 512 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 6494 பேருக்கு பாதிப்பு; 153 பேர் பலி; 3680 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 308 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 136 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 44 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 26 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 14 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 1189 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 436 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 26 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2029 பேருக்கு பாதிப்பு; 39 பேர் பலி; 1847 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 153 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 1743 பேருக்கு பாதிப்பு; 41 பேர் பலி; 597 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 1489 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 720 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1761 பேருக்கு பாதிப்பு; 45 பேர் பலி; 1043 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 3332 பேருக்கு பாதிப்பு; 265 பேர் பலி; 1221 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 2709 பேருக்கு பாதிப்பு; 55 பேர் பலி; 1763 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 6170 பேருக்கு பாதிப்பு; 272 பேர் பலி; 3089 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 5735 பேருக்கு பாதிப்பு; 152 பேர் பலி; 3238 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 168 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 59 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.