சென்னை: தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாரத்தில் 6 நாட்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க உத்தரவிடப்
பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை செயலாளர் முருகானந்தம், பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு துறைகள் அனைத்துக்கும் வழக்கமான வேலை நாட்களுடன் சனிக்கிழமையும் உள்ளடக்கி வாரத்தின் 6 நாட்களும் வேலை நாட்கள். 33 சதவீத அலுவலர்களுடன் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் மட்டும் இனி 50% அலுவலர்களுடன் பணிபுரிவதை கடைபிடிக்க வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்தது.