தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நீதி: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வௌியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே கறுப்பு நாள் என்று சொல்லுமளவுக்கு 2018, மே 22ம் தேதி தூத்துக்குடியில் காவல்துறையினரால் சொந்த மக்களே வேட்டையாடப்பட்டனர். நச்சு பரப்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய 13 பேரை குண்டுகளை பாய்ச்சி கொன்று குவித்தனர். இந்த வெறியாட்டம் நடந்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க என்றைக்கும் அமமுக துணை நிற்கும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: