சென்னை: கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசின் தலைமை செயலாளரை நேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். சென்னையில் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களில் சட–்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இணைத்திட வேண்டும்.