தென் கொரியாவில் பிரபலமான கே லீக் கால்பந்து தொடர் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் மே 8ம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒரு போட்டியின்போது எப்சி சியோல் அணி சார்பில் கேலரியில் 26 பெண் பொம்மைகளையும், 2 ஆண் பொம்மைகளையும் வைத்தனர். இதை பார்த்து வீரர்கள் உற்சாகமானார்களோ இல்லையோ அரங்கில் இருந்த போட்டி அமைப்பாளர்கள் ஆச்சர்யமடைந்தனர். நேரடி ஒளிபரப்பை பார்த்த ரசிகர்களுக்கோ அதிர்ச்சி.