சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் இருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டார். மெரினா காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே சென்றபோது, ஐஸ் ஹவுஸ் பகுதியிலிருந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் குறுக்கே புகுந்து மின்னல் வேகத்தில் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கிருந்த போக்குவரத்து போலீசார் மின்னல் வேகத்தில் வந்த பைக்கை மடக்கி பிடிக்க முயன்றனர்.