ஆலந்தூர்: உள்ளகரம் கிருஷ்ணா நகர் இணைப்பு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (59). சென்னை அண்ணாசாலையில் எல்ஐசி பின்புறம் உள்ள ஒரு அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இவர், நேற்று தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி ஓடிவந்த சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள்.