தொழிலாளர்களுக்கு எதிரான கூட்டுப்போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்: மதிமுக வேண்டுகோள்

சென்னை: மதிமுக தொழிலாளர் அணி பொதுச்செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு அண்மையில் தொழிலாளர்களுக்கு விரோதமாக, தொழிலாளர் வர்க்கம் நூறாண்டு காலத்திற்கு மேலாகப் போராடிப் பெற்ற, 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி, நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று, தொழிலாளர்களுக்கு விரோதமாக அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி 18ம் தேதி சென்னை எச்.எம்.எஸ் தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தொழிலாளர் முன்னணியின் தலைவர் வழக்கறிஞர் அந்திரிதாஸ், செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் அனைத்துச் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 22ம் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற தொழிற்சாலை அலுவலகத்திற்கு முன்பாக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே, எம்.எல்.எப். தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: