புதுடெல்லி: ஊரடங்கால் மோட்டார் வாகன காப்பீடு, கடந்த மாதத்தில் 49 சதவீதம் குறைந்துள்ளது. ஊரடங்கிற்கு பிறகு வாகன போக்குவரத்து அடியோடு குறைந்து விட்டது. நிறுவனங்களும் இயங்கவில்லை. வேலையிழப்பு, வருவாய் இழப்புகள் காரணமாக மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், பல்வேறு துறைகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆயுள் காப்பீடு துறையில் பிரீமியம் வருவாய் குறைந்து விட்டது. இதுபோல், மோட்டார் வாகன காப்பீடுகளும் சரிவை சந்தித்துள்ளன.