புதுடெல்லி: கொரோனா வைரஸ் பற்றி தகவல் தெரிந்து கொள்ள புதிதாக ஏதாவது ‘லிங்க்’ மொபைலுக்கு வந்தால் ஏமாறாதீர்கள். கிரெடிட் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் திருடு போகலாம் என, சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு ஏஜென்சிகளுக்கு சிபிஐ அனுப்பியுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், ‘மக்கள் கொரோனா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் பற்றி தகவல் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும் என, எஸ்எம்எஸ்சில் ஒரு லிங்க் அனுப்புகின்றனர்.