சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 752 குறைந்தது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதிக்கு முன்னர் சவரன் தங்கம் 31,616க்கு விற்கப்பட்டது. அதாவது மார்ச் 23ம் தேதி இந்த விலையில் விற்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டது. இருந்த போதிலும் நகை விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஏசி இல்லாத நகைக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த 14ம் தேதி சவரன் 35,720, 15ம் தேதி 36,008, 16ம் தேதி 36,368க்கும் விற்கப்பட்டது.