×

ஜூலை 31 வரை டென்னிஸ் போட்டிகள் ரத்து

லண்டன்: சர்வதேச டென்னிஸ்  போட்டிகள் அனைத்தும்  ஜூலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் மார்ச் மாதம் முதல் போட்டிகள் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ இணைந்து ஜூலை 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏப்ரலில் அறிவித்தன. தொற்று அதிகரித்து வரும் நிலையில்  சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஏ) ஜூலை 31 வரையிலான அனைத்து போட்டிகளும்  இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இது குறித்து  ஏடிபி தலைவர்  கவுடென்சி , ‘சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,  தள்ளி வைக்கப்பட்டுள்ள போட்டிகள் மீண்டும் பாதுகாப்பாக நடத்துவதற்கான  வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறொம்’ என்று கூறியுள்ளார்.

ஜூலை மாதம்  நடைபெற இருந்த 4 மகளிர் டென்னிஸ் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ரோஜர் கோப்பை  போட்டி அடுத்த ஆண்டுக்கு  தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘டென்னிஸ் போட்டிகளை  ரசிகர்கள் இல்லாமல்  விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். அதற்காக அரசுகளிடம் பயிற்சி, போட்டிகள் நடத்த அனுமதி கேட்டுள்ளோம்’ என்று போட்டி அமைப்பாளர்கள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Tennis matches ,matches , Tennis matches canceled
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி