சென்னை: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் சாதனமான வென்டிலேட்டர்களை குறைந்த செலவில் கச்சிதமாக பொருத்தக்கூடிய அளவில் வடிவமைத்து சென்னையை சேர்ந்த இளம் பொறியாளர் சாதனை படைத்துள்ளார். கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ ஆராய்ச்சிகள், மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் பணிகளில் இளைஞர்களும், தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் சக்கரவர்த்தி என்ற 24 வயது மெக்கானிக்கல் இன்ஜினியர் சிறிய மற்றும் சரியான அளவில் நோயாளிகளுக்கு பொருத்தக்கூடிய குறைந்த செலவிலான வென்டிலேட்டரை வடிவமைத்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த வென்டிலேட்டரை பயன்படுத்த முடியும். அபிலாஷ் தனது குழுவினருடன் இணைந்து தங்களிடம் கிடைத்த உபகரணங்களை கொண்டு இந்த வென்டிலேட்டரை வடிவமைத்துள்ளார். மத்திய மாநில அரசுகளின் அனுமதி மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அனுமதி கிடைத்துவிட்டால் ஓரிரு நாளில் வென்டிலேட்டர்களை தயாரிக்கவும், வணிக ரீதியாக விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளார்.