சென்னை: சென்னையில் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், திருவில்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் பகலில் உணரப்படுகிறது. பல இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.