நாகை: அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று 100 பேர் குடும்பத்துடன் நாகை கடற்கரையில் குளித்தனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் பெற மட்டும் ஒரு நபர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவும், பொது மக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நேற்று நாகை அருகே கடற்கரையில் 100 பேர் குடும்பத்துடன் வந்து கடல் நீரில் இறங்கி குளித்தனர். அதிகாரிகளின் கண்களின் மண்ணை தூவி விட்டு சமூக இட வெளியை பின்பற்றாமல் கடலில் இறங்கி குளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.