நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பிலும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் கொரோனா கவச உடை தயாரிக்கும் பணியும் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குலசேகரம், குழித்துறை, குளச்சல், கொல்லங்கோடு உள்பட 7 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இதில் நாகர்கோவிலில் 2 தீயணைப்பு வண்டியிலும், மற்ற இடங்களில் தலா 1 தீயணைப்பு வண்டியிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு வண்டிக்கு 4 தீயணைப்பு வீரர்கள் வீதம், சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள். குறிப்பாக கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் 8 கி.மீ. சுற்றி உள்ள கட்டிடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடக்கின்றன. நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியை சுற்றி உள்ள சுசீந்திரம், பறக்கை உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை 500க்கும் மேற்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்துள்ளனர். உயரமான கட்டிடங்கள், கோபுரங்களில் மருந்து தெளிக்கும் பணியும் நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் கொரோனா கவச உடை தயாரிக்கும் தீயணைப்பு துறை : 500 க்கும் மேற்பட்ட ஊர்களில் கிருமி நாசினி தெளிப்பு
- தீயணைப்பு துறை
- மாவட்டம்
- கொரோனா
- நகரங்களில்
- குமாரி
- குமாரி மாவட்டம் தீயணைப்புத் துறையைத் தயாரிக்கவும்