சென்னை: ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் அடித்தட்டு மக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். அமைப்பு சாரா மற்றும் தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் தேவை என்று தெரிவித்த அவர், ரயில் நிலையங்களில் சுமை தூக்கும் 120 தொழிலாளர்களுக்கு மளிகை பொருள், நிதியுதவி வழங்கினார்.