கைதி தற்கொலை முயற்சி

புழல்: புழல் சிறையில் துணிகளை காய வைக்கக்கூடாது என காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரு கைதி தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம், குப்பண்ண கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (33). வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சவுந்தரராஜன், தனது துணிகளை துவைத்து, அங்குள்ள அறையில் கயிறு கட்டி காய வைக்க முயற்சித்தார்.

இதை பார்த்த சிறைக் காவலர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரை வேறொரு பிளாக்கில் அடைத்தனர். இதனால் மனமுடைந்த சவுந்தரராஜன், அங்கிருந்த பிளேடால் தனது இடது கையை சரமாரியாக அறுத்துக் கொண்டார். இதனால் அவரது கையில் ரத்தம் பீறிட்டது. தகவலறிந்து சிறை அதிகாரிகள், அங்கு சென்று படுகாயமடைந்த சவுந்தரராஜன்னை மீட்டு, சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: