மதுரை: மதுரை தாகூர்நகரில் குடும்ப பிரச்சனை காரணமாக மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை முத்துக்குமார் என்பவர் மண்வெட்டியால் தலையில் தாக்கியதில் மகன் அருண்குமார் உயிரிழந்தார். மகனை கொலை செய்த முத்துக்குமாரை கைது செய்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.