×

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள்: எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா வழங்கினார்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் நகராட்சியில் பணிபுரியும் 250க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களை எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா வழங்கினார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு நோய் தோற்று ஏற்படா வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் பணிபுரியும் 250 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உடல் கவசம், கைஉறை, முககவசம், கை கழுவ சோப்பு போன்ற பாதுகாப்பு சாதனங்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமை தாங்கி வழங்கினார். மேலும் நகராட்சி அதிகாரிகளிடம்  முககவசங்களை தனது சொந்த செலவில் வழங்கி ஊழியர்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் நிலவள வங்கி தலைவர் முத்தையா, ஆணையாளர் சத்தியநாதன், நகராட்சி பொறியாளர் ரமேஷ் மருது, பாண்டியன் மேலாளர் பாபு சுகாதார ஆய்வாளர்கள் பழனி, குரு பிரமநாயகம், சரவணன் சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் எக்ஸ்னோரா சந்திரன், தைலாகுளம் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Thiruvilliputtur ,MLA ,Chandraprabha Muthiah ,MLA chandhira prabha , Thiruvilliputtur, Cleaning Staff, MLA chandhira prabha
× RELATED மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா...