மஞ்சூர்: கீழ்குந்தா பேரூராட்சியில் சுமார் 15க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடை வீதி, கிராமப்புறங்களில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இவர்களுக்கு கொரோனா அச்சுறுதல் காரணமாக பணிச்சுமை அதிகரித்துள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளிப்பது, நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.