விழுப்புரம்: விழுப்புரம் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தப்பி ஓடினார். 30 வயதான டெல்லியை சேர்ந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். தப்பியோடிய நபர் புதுச்சேரியில் பதுங்கியுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2019 டிச மாதம் நேர்காணலில் பங்கேற்க டெல்லியில் இருந்து புதுச்சேரி வந்துள்ளார்.