திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பில் 80 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை மதுவிலக்கு போலீசார் தேடி வருகின்றனர்மதுவிலக்கு போலீசார் டிஎஸ்பி ஸ்டீபன் உத்தரவின் பேரில், கடந்த ஒரு வாரமாக சாராய ஊறல் மற்றும் கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செவலஊரணி அருகே உள்ள மாந்தோப்பில் சாராயம் காய்ச்சுவதற்கு சாராய ஊறல் வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற மதுவிலக்கு போலீசார், அங்கு 80 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கிருந்து நபரை பிடித்து விசாரித்தபோது அவர் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பது தெரியவந்தது.