சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டியில் தடை உத்தரவை மீறி இறைச்சிக் கடை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டரை அ.தி.மு.க. நகர ெசயலாளர் காவல் நிலையத்துக்குள் புகுந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இறைச்சிக்கடைகளில் அதிக கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி பின்பற்றப்படாத காரணத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி செயல்படும் இறைச்சிக் கடைக்காரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி செயல்பட்ட இறைச்சிக் கடைகள் நடத்தியவர்கள் மீது போலீசார் மீது வழக்குப்பதிந்தனர்.
தடையை மீறி இறைச்சி கடை நடத்தியவர்கள் மீது வழக்கு காவல் நிலையத்துக்குள் புகுந்து இன்ஸ்பெக்டரை மிரட்டிய அ.தி.மு.க. செயலாளர்: பு.புளியம்பட்டியில் பரபரப்பு
- இறைச்சி கடைக்காரர் செயலாளர்
- அஇஅதிமுக
- Puliyampatti
- இறைச்சி கடை உரிமையாளர்கள்
- இன்ஸ்பெக்டர்
- காவல் நிலையம்