திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் தூய்மை தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து உணவுப்பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவிவரும் நிலையில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்து வரும் மாநகராட்சி தூய்மை தொழிலாளர்கள் திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் நேற்று கவுரவிக்கப்பட்டனர்.