காவல் துறை சார்பில் தூய்மை தொழிலாளர் கவுரவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் தூய்மை  தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து உணவுப்பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவிவரும் நிலையில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்து வரும் மாநகராட்சி தூய்மை  தொழிலாளர்கள் திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் நேற்று கவுரவிக்கப்பட்டனர்.

புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தூய்மை  தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து உணவு பொருட்கள் அடங்கிய பையை வழங்கினர். இதில், மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: