×

சீனாவுக்கு ஆதரவு தரும் WHOக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: கொரோனா தொற்று விவகாரத்தில் WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்திவைக்க போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2000 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவிடம் இருந்து அதிக நிதி பெறுவதாக தெரிவித்தார்.ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைகளை சுகாதார நிறுவனம் விமர்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.உலக சுகாதார நிறுவனம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், அது சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவது போன்று தோன்றுகிறது எனவும் சாடினார். இது சரியில்லை என்றும் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

கொரோனா வைரஸ் குறித்து பல தகவல்கள் முன்னரே வெளியானாலும் அவற்றை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அலட்சியப்படுத்தி விட்டதாக கூறினார்.சீனா மீது பயணத் தடை விதிக்க வேண்டும் என தாம் கூறிய போது அதை ஏற்காமல் உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறிழைத்து விட்டது என்பதும் டிரம்பின் குற்றச்சாட்டு. டிரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Dr. Tedros Adhanom Ghebreyesus’ மறுத்துள்ளார். சர்வதேச அமைப்பான WHO சீனாவின் கைப்பொம்மையாக மாறிவிட்டது என டிரம்ப் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Trump ,US ,WHO ,China WHO ,China , Corona, infection, china, support, WHO, funding, cancellation, USA, President, Trump, blackmail
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்