×

திருத்தணியில் ஓய்வூதியம் வாங்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்து பலி

சென்னை: ஓய்வூதியம் வாங்க வந்த மூதாட்டி திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார். திருத்தணி அடுத்த குமாரகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சீவி அம்மாள் (60). இவர், நேற்று திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு தன்னுடைய ஓய்வூதியத்தை பெறுவதற்காக வந்தார். வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதித்த டாக்டர், மூதாட்டி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.


Tags : Thiruthani, pensions, godmother, sacrifice
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...