கொரோனா நிவாரணத்துக்காக நடிகர் அஜித் 1.25 கோடி நிதி

சென்னை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ உதவி மற்றும் மக்களுக்கு உதவ, பல்வேறு தரப்பினர் நிதி அளிக்கும்படி பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து நடிகர் அஜித் குமார் ரூ.1 கோடி ரூபாயை கொரோனா நிவாரண பணிகளுக்காக வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் தேசிய ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் இல்லாமல் கஷ்டப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு (பெப்சி) 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார் அஜித். இந்த தொகைகளை அவர் தனது வங்கி கணக்கு மூலம் செலுத்தியிருக்கிறார்.

Related Stories: