சென்னை: மின்வாரியத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முகக்கவசம், சானிடைசர் மற்றும் கையுறை பற்றாக்குறையாக உள்ளதாக மின்கழக தொமுச பொதுச் செயலாளர் சிங்கார.ரத்தினசபாபதி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: களப்பிரிவு மூன்றாம் நிலை, நான்காம் நிலை ஊழியர்கள் சுமார் 53,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தற்பொழுது மின் வாரியம் அறிவித்துள்ளபடி மின்தடை இல்லாமல் பழுதுகளை சரி செய்வது மற்றும் துணை மின் நிலையம் முறைப்பணி செய்து வருகின்றனர்.