சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 14 நாட்களில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாகவும் 1 லட்சத்து 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். 78 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் ேநற்று வரை மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர்.