சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 14 நாட்களில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாகவும் 1 லட்சத்து 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். 78 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் ேநற்று வரை மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 14 நாட்களில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றியதாக 92 ஆயிரத்து 862 வழக்குகள் பதிவு செய்து, 1 லட்சத்து 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 78 ஆயிரத்து 240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 27 லட்சத்து 73 ஆயிரத்து 794 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.