திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க, வைர நகைகளால் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருமஞ்சனத்துடன் வசந்த உற்சவம் நிறைவுபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் கடந்த 5ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை 8 மணியளவில் உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி, சீதா, ராமச்சந்திரசுவாமி, லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி, சத்தியபாமா சமேத கிருஷ்ணர் ஆகியோர் மூலவர் சன்னதியில் இருந்து தங்க, வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, கல்யாண மண்டபத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், ஆஸ்தானமும் நடந்தது.