பாடாலூர்: செட்டிக்குளம் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வராததால், அங்குள்ள குரங்குகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில நாட்களாக கோயில் பூட்டப்பட்டுள்ளது. பூஜைகள் மட்டும் வழக்கமாக நடந்து வருகிறது. மேலும் இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் நேற்று விழா எதுவும் நடைபெறாததால், பக்தர்கள் கூட்டமின்றி கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.