சென்னை: தமிழகத்தில் 12 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இரும்பு, சிமெண்ட், உரம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளித்துறை, சர்க்கரை ஆலை, கண்ணாடி ஆலை, காகிதம், டயர், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, தோல் பதினிடும் ஆலை, உருக்கு ஆலை, ஆகிய தொழிற்சாலைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. குறைவான பணியாளர்களை கொண்டு ஆலைகளை இயக்க தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.