சேலம் : மத உபதேசங்களுக்காக இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த சிலரால் கொரோனா வைரஸ் பரவியதாக கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் இருந்து இவர்கள் 11 பேரும் மத போதனைக்காக கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி சேலத்திற்கு வந்தவர்கள் ஆவர். இவர்கள் மட்டுமன்றி இவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர்கள் மற்றும் தங்க ஏற்பாடு செய்தவர்கள் என 7 பேர் மீது கொரோனா வைரஸ் பரப்பியதாக வழக்குப்பதியப்பட்டுள்ளது.