டெல்லி: ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்னும் எந்த முடிவு எடுக்கவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.