பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் கிராமத்தில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவரின் கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து கிடந்துள்ளது.