ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் பங்கேற்ற கிருமிநாசினி சுரங்க திறப்பு விழாவில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கொரோனா சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு, தொற்றுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று நோயை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.