வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க 2 தடுப்பு மருந்துகளை மனிதர்கள் உடலில் செலுத்தி சோதனை செய்ய தயாராக இருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில், வைரஸ் வராமல் தடுக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.இதுவரை அதிகாரப்பூர்வமாக கொரோனாவுக்கு எந்த ஒரு தடுப்பு மருந்தும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மலேரியாவை குணப்படுத்தப் பயன்படும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துக்காண தேவைகளுக்கு அதிகரித்துள்ளது. இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளதால், தடையை நீக்கி மலேரியா மருந்தை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.