×

கொரோனா தொற்று பீதி பெரியகுளத்தில் எளிமையாக நடந்த இஸ்லாமியர் திருமணம்

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக எளிய முறையில் இஸ்லாமியர் திருமணம் நடைபெற்றது.தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கத்திலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் 10 நாட்களாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் உள்ளனர். இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள துலுக்கபட்டி சேர்ந்த நசீமாபானு மற்றும் பெரியகுளம் தென்கரை சேர்ந்த சமீர் ஆகிய இருவருக்கும் பெரியகுளம் வடகாநாயுடு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரியகுளம் தென்கரை ஜெயம் நகரில் மணமகனின் இல்லத்தில் இரு வீட்டார் சார்பிலும் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி அஜரத் மந்திரம் ஓத திருமணம் நிறைவேறியது. ஆடம்பரமான மாலை, அலங்காரம் பிரியாணி போன்ற சாப்பாடுகள் தவிர்க்கப்பட்டது.



Tags : panic attacks , coronavirus, epidemic,s simply, overwhelming,Islamist, marriage
× RELATED ஊரே கொரோனாவால் பீதியடைந்துள்ள...