டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் 40-வது நிறுவன நாளை ஒட்டி கட்சித் தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். கொரோனாவை எதிர்கொள்வதில் இந்தியா முன் உதாரணமாக திகழ்கிறது, மேலும் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு பாராட்டி உள்ளதாக தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிராக மக்கள் இதயப்பூர்வமாக ஒன்றுப்பட்டு வெற்றி பெற உறுதி பூண வேண்டும் என தெரிவித்தார்.