சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களில் நுழைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. சத்தியமங்கலம் அருகே வரதம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயி குப்புசாமி என்பவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு குப்புசாமி தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை, தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாட்டை கடித்துக்கொன்று இழுத்துச்சென்றது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.