கொரோனா ஒழிப்பு பணிக்கு திமுக சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: ஆவடி நாசர் உறுதி

திருவள்ளூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய் ஒழிப்பு தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கொரோனா ஒழிப்பு பணியினை துரிதப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்தார். அப்போது திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: