இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,577-லிருந்து 4,067-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,577-லிருந்து 4,067-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனவால் 109 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 292 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கும், தமிழகத்தில் 571 பேருக்கும் கொரோனா உறுதியானது என தெரிவித்துள்ளது.

Related Stories: