டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 69,424 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,272,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 262,217 பேர் குணமடைந்தனர். மேலும் 45,619 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,887 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128,948 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,641 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131,646-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,616 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 336,673 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,165 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,577 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 267 பேர் குணமடைந்தனர். பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,078 அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஈரானில் 3,603 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,934 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,806 ஆக உயர்ந்துள்ளது.மேலும் சீனாவில் 81,669 பேருக்கும், ஜெர்மனியில் 100,123 பேருக்கும், பிரான்சில் 92,839 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 525 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 518 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,165 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 694 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571- ஆக அதிகரித்துள்ளது.