×

கொரோனாவை தடுக்க தமிழகத்தில் அதிவேக ரத்த மாதிரி ஆய்வு தொடங்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கொரோனாவை தடுக்க தமிழகத்தில் அதிவேக ரத்த மாதிரி ஆய்வு தொடங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவலை தடுக்க ஆய்வுகளை விரைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ரத்த மாதிரி சோதனைதான் மிகச்சிறந்த தீர்வாகும். வழக்கமான தொண்டைச்சளி ஆய்வுடன் ஒப்பிடும் போது ரத்த மாதிரி சோதனை செலவு குறைந்தது. அதுமட்டுமின்றி தொண்டைச்சளி ஆய்வு முடிவு தெரிய 5 மணி நேரத்திற்கும் அதிக நேரம் ஆகும் நிலையில், ரத்தமாதிரி ஆய்வு முடிவுகள் இரண்டரை மணி நேரத்தில் வெளியாகி விடும்.  எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கலாம் என நம்பப்படும் பகுதிகளில் ரத்தமாதிரி சோதனையை அதிக அளவில் நடத்த அரசு முன்வர வேண்டும்.


Tags : Tamil Nadu ,Ramadas High ,Ramadas ,Nadu , Corona, tamilam, Ramadoss
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...